2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்தில் 26 பேர் காயம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை கெக்கிராவ பிரதான வீதியில் மிரிஸ்கோனிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30) ஏற்பட்ட வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் மற்றும் லொறி என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 18 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அரை சொகுசு பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து பஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் அதிவேகமாக பஸ்ஸை செலுத்தியமையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .