2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நன்னீர் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு மீன் குஞ்சுகள் விடப்பட்டன

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பந்தோட்டை குளத்தில் முப்பது வகையான நன்னீர் மீன் குஞ்சுகள் 30 இலட்சம் விடப்பட்டுள்ளதாக  நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபையின் இயக்குநர் பே.ஆர்.டீ.சம்பத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிலவிய வரட்சியான காலநிலையின் காரணமாக நன்னீர் மீன்களின் எண்ணிக்கை குறைவடைந்தமையினால் நன்னீர் மீன்களின் பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டே இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ரீதியகம மற்றும் ரன்மது வௌ ஆகிய பகுதிகளிலுள்ள குளங்களிலும் இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .