2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் அனுமதிப் பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதியும் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான எஸ்.எல்.ஏ. றஸீட், இன்று வெள்ளிக்கிழமை (04) தீர்ப்பளித்தார். 
 
அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டிருந்த இந்நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதியும், நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான எஸ்.எல்.ஏ. றஸீட் முன்னிலையில் இன்று (04) ஆஜர்படுத்திய போதே நீவதான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .