2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, சூரியபுர பகுதியில் எட்டு வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை, நேற்று வியாழக்கிழமை (03) இரவு 8.00 மணியளவில் கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.  
   
கைது செய்யப்பட்டவர், சூரியபுர பிரதேசத்திலுள்ள சிறுமிகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர் எனவும் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக சிறுமி தாயிடம் கூறியதையடுத்து, தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்ததாகவும் சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சூரியபுர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .