2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண்சரிவு அபாயம்: கொக்மதுவ-இமாதுவ வீதி மூடப்பட்டது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மதுவ-இமாதுவ வீதி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீதியின் 114 மைல் கல் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தை கருத்திற்கொண்டே இவ்வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை மூடப்பட்டிருந்துடன் இன்று காலை ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக மீண்டும் திறக்கபட்டது.

இந்நிலையில் மண்சரிவு எச்சரிக்கையை கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல்வரை இவ்வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .