2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சதாதிஸ்ஸபுர பகுதியில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, சதாதிஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை  (03) பொதுமக்கள் சாலை மறியலிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும்; ஈடுபட்டனர்.

சதாதிஸ்ஸபுர பகுதியிலுள்ள நிலப்பகுதியொன்றை பிரதேச செயலகம் தனியான ஒரு நபருக்கு மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவ்விடத்திற்கு விரைந்த அமைச்சர் தயா கமகே அந்த நிலத்தை எந்த நபரும் சட்டவிரோதமாக பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அதற்குரிய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .