2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாணவர்களுடனான முதலமைச்சரின் சந்திப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆங்கில பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வரும் மாணவர்களை, மன்னாருக்கு சனிக்கிழமை (03) விஜயத்தை மேற்கொண்ட வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த பயிற்சி நிலையத்தில், பாடசாலை கல்வியை நிறைவு செய்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மொழி ஆற்றலை மேம்படுத்தும் வகையில் சிங்கள மொழி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மன்னாரில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த முதலமைச்சர்,  குறித்த பயிற்சி நிலையத்துக்குச் சென்று பயிற்சி பெற்று வரும் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .