2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருமலை ஆயர் பட்டதாரிகளுடன் சந்திப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட  தமிழ்ப் பட்டதாரிகளை  இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவண. நோயல் இமானுவேல் சந்தித்துள்ளார்.

இதன்போது,அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக ஆயர் பட்டதாரிகளுக்கு தெரிவித்தார்.

மேலும்,பட்டப்படிப்பை ஏலவே முடித்துக் கொண்ட பட்டதாரிகளது பெயர் பட்டியலையும் ஆயர் பெற்றுச் சென்றார்

தொடர்ந்து 7ஆவது நாளாகவும் இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .