2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென்னை, மா மரக் கன்றுகள் விநியோகம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

கந்தளாய் பிரதேச செயலகமும் கந்தளாய் கமநல சேவைகள் அலுவலகமும் இணைந்து கந்தளாயில் தெரிவசெய்யப்பட்ட  107 விவசாயிகளுக்கு இன்று புதன்கிழமை தென்னம் கன்றுகள் மற்றும் மா மரக்கன்றுகள் வழங்கியுள்ளன.

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு,இரண்டாம் குலனி,ரஜஎல,அணைக்கட்டு மற்றும் பொட்டம்காடு போன்ற பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மேட்டு நிலப்பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கே இக்கன்றுகள் வழங்கப்பட்டன.                               

இந்நிகழ்வில். கந்தளாய் பிரதேச செயலாளர் பிரேமதாஸ,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .