2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோல்டாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில் நாளை 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகவுள்ளது.

அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கு இன்று வியாழக்கிழமை பயணமாகியுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் நாட்டின் தற்போதைய தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகிக்கின்றார்.

பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டா பிரதமர் ஜேசப் மஸ்கட்டிடம் நாளை கையளிப்பார்.
 
இலங்கையின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 9 ஆம் திகதி பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவி, ஜனவரி 10ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .