Shanmugan Murugavel / 2015 நவம்பர் 30 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பகலிரவு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து நிலைத்திருக்குமென, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே அவர், இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.
மென் சிவப்புப் பந்தால் விளையாடப்பட்ட இப்போட்டி, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்திருந்த போதிலும், 123,736 இரசிகர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தொலைக்காட்சி தரப்படுத்தலிலும், மிக உயர்ந்த எண்ணிக்கையானோர் பார்வையிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கலம், 'இதுவொரு சிறப்பான திட்டம். மென்சிவப்பு கிரிக்கெட் மேலும் வளர்ச்சியடையும் போது அது, பூகோள விளையாட்டாக மாறும்" எனத் தெரிவித்தார். 'பகலிரவு டெஸ்ட் போட்டிகளென்பவை, டெஸ்ட் போட்டிகளை இரவு நேரத்தில் விளையாடுவதற்கு அனுமதிப்பதே தவிர, டெஸ்ட் போட்டிகள் எவ்வாறு விளையாடுமென்பதை மாற்றுவதல்ல" எனவும் அவர் குறிப்பிட்டார்.
மென்சிவப்புப் பந்தின் தன்மையைப் பாதுகாக்க, போட்டியின் ஆடுகளத்திலும் மைதானத்திலும், வழக்கத்துக்கு மாறாக அதிக புற்கள் காணப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியிதாகக் குறிப்பிட்ட அவர், எனினும், மக்கள் இதை விரும்பியதாகவும், இது நிலைத்திருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .