2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையேறிய மாணவர்கள் கீழே விழுந்து காயம்

George   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமுனுகல மலையில் ஏறுவதற்காக அங்கு சென்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர், வழுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் திங்கட்கிழமை(30) இரவு 11 மணியளவில் இடமபெற்றுள்ளது.

கொழும்பு ஜயவர்தனபுர, சப்ரகமுவை மற்றும் ஊவா வெல்லஸ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 மாணவர்களும் மற்றுமொருவரும் குறித்த மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். 

சம்பவம் இடம்பெற்றதையடுத்து, பொலிஸ் அவசரபிரிவு இலக்கமான 119க்கு தெரிவித்ததையடுத்து, பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .