George / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனர்.
அக் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை. சிவப்பு விளக்கு ஒளிர்வதுடன், சமிஞ்சை ஒலி எழுப்படும். அது மட்டுமே அக் கடவையில் ரயில் வருவதற்கான அறிகுறிகளாகும்.
அதனை சிலர் கவனத்தில் எடுக்காது அக்கடவையினை கடந்து செல்கின்றனர். இதனால் உயிராபத்து ஏற்பட கூடிய விபத்துக்கள் இடம்பெறும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக கடந்த மாதம் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .