2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

குசாலுக்கு நான்கு வருடத் தடை: அமைச்சர்

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்படவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 
 

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என, முதலாவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அவர், நியூசிலாந்துத் தொடரிலிருந்து மீள அழைக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாதிரிப் (பி மாதிரி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் தயாசிறி, இரண்டாவது மாதிரிப் பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தியதாகவும், எனவே குசால் பெரேராவுக்கு நான்கு வருடத்தடை விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X