Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி, நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இத்தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக, இப்போட்டி அமையவுள்ளது.
நெல்சனிலுள்ள சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி, படுமோசமான தோல்விகளைச் சந்தித்திருந்தது. குறிப்பாக 2ஆவது போட்டியில், 117 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி, 8.2 ஓவர்களில் அந்த ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தது. இந்தத் தோல்வியை, அவமானகரமானது என, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸூம் பயிற்றுநர் ஜெரோம் ஜயரத்னவும் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, இந்த அவமானத்திலிருந்து மீண்டு, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று, தொடரைத் தொடர்ந்தும் உயிர்ப்பில் வைத்திருக்கும் சவாலுடன், மூன்றாவது போட்டியில் இலங்கை களமிறங்குகிறது.
இலங்கை அணியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், எவ்வாறான மாற்றங்களென இதுவரை தெரியவரவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .