2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 02/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடன் கிடைக்கும் அற்ப நிம்மதிக்காக, பின்வரும் பக்க விளைவுகளைத் தெரியாமலேயே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

நுளம்புகளை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்கள் ஐந்து சதவீதமே நுளம்புகளைக் கொல்கின்றன. 

தொண்ணூற்றைந்து சதவீத நச்சுப் பொருட்கள், காற்றில் கலந்து மக்களுக்குப் பெரும் தீமைகளை உருவாக்கிவிடுகின்றன.

மேலும், வயல்கள், தோட்டங்களில் தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் முழுமையாக கிருமிகளுக்குப் போய்ச் சேர்வதுமில்லை. விவசாயிகளுக்குப் பயன்தரும் உயிரினங்களையும் நச்சுப் பொருட்கள் அழித்து விடுகின்றன. இது, அறிவியலாளர்களின் எச்சரிக்கையுமாகும்.

இயற்கை முறையில் இவற்றை ஒழிக்கப் பல வழிகளுள்ளன. கேட்பதற்குத் தான் யாருமில்லை. வர்த்தக நிறுவனங்களுக்கு மக்கள் பணவிருந்து படைக்கிறார்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .