2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இலங்கையை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்; அணி 48.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  212 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக,ஹசன் மொய்சன் 86 ஓட்டங்களையும்  மொஹமட் உமர் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக  திலான் நிமேஷ், வனிடு ஹசரங்க, தமித்த சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக்  கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக  கமிந்து மென்டிஸ் 68 ஓட்டங்களையும் விஷாட் ரந்திக 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக, ஷதாப் கான் 3 விக்கெட்களையும் சமீன் குல், ஹசன் மொய்சன், அஹமட் ஷாபிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X