2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தீயினால் இரண்டு வீடுகள் சேதம்

George   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை மற்றும் பமுனுகல ஆகிய பிரதேசங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்ப்பட்ட தீ விபத்தில், அந்த வீட்டிலிருந்து சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், மின்சாரசபை ஊழியர்கள், மொரட்டுவை மற்றும் களுத்துறை நகரசபை தீயணைக்கும் பிரிவினர் ஆகியோருடன் பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, பமுனுகம, முத்துராஜவெல பிரதேசத்தில் உள்ள வீட்டிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வீட்டிலும் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு தீ விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .