2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: சித்தப்பா கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா  

வெலிமடை, டயரபா பகுதியில் பதினான்கு வயது நிரம்பிய சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில், மேற்படி சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவரை,  வெலிமடை
பொலிஸார்  ஞாயிற்றுக்கிழமை (07) கைதுசெய்துள்ளனர்.

வெலிமடை பொலிஸாருக்கு இச்சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற  தகவலலையடுத்தே, அந்நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாதிப்புக்குள்ளான  சிறுமி, தற்போது வெலிமடை வைத்தியசாலையில்  சிகிச்சைப் பெற்று வருகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தந்;தை உயிரிழந்த பின்னர், சிறுமியின் தாய் மேற்படி நபரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .