2024 மே 04, சனிக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற 11 பேருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற  குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் படி  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, செவ்வாய்க்கிழமை (09) அபராதம் விதித்தார்.  

அத்துடன், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டஈட்டை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கை மின்சார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து திங்கட்கிழமை (08) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .