2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது.

George   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை நேற்று(10) புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்தள்ளது.

2 படகுகளில்  வந்த 12 மீனவர்கள்,இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர்.

அதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X