Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிராக இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிருக்கு, தனது பாராட்டை வெளிப்படுத்துவதாக, இந்திய அணியின் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது, இந்திய அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட போது, அற்புதமான முதலாவது ஓவரை வீசிய ஆமிர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். மீண்டுமொரு விக்கெட்டை ஆமிர் கைப்பற்ற இந்திய அணி ஒரு கட்டத்தில், 3 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்தது.
எனினும், தனது 49 ஓட்டங்களின் துணையுடன் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராத் கோலி, வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த போது, 'மொஹமட் ஆமிர் பந்துவீசிய விதத்துக்கு, நான் அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில் நான், அவர் பந்துவீசும் போதே பாராட்டியிருந்தேன். அவ்வாறான பந்துவீச்சை விளையாடுவது அற்புதமாக இருந்தது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .