Menaka Mookandi / 2016 மார்ச் 17 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நீதவான் விசாரணை பூர்த்தியான நிலையில், மேலதிக விசாரணைக்காக மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், கடற்படை வீரர்கள் உட்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் போதியளவான சாட்சிகள் உள்ளன என்றும் இவ்வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே குறிப்பிட்டார்.
அத்துடன், சந்தேகநபர்களை எதிரவரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .