2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை மறுப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடுச்சந்தி பகுதியில் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீடித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

கிளிநொச்சிப் பொலிஸாரால் கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் கடந்த மாதம் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த குற்றச்சாட்டின் இரண்டாவது சந்தேக நபர் பிணை விண்ணப்பித்தை சட்டத்தரணியூடாக சமர்ப்பித்தபோது, அதனை நீதிவான் நிராகரித்ததுடன், கஞ்சா பாவனையினால் இளம் சமூகம் சீரழிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சீரழிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு துணையாக இருப்பவர்களுக்கு பிணை வழங்க முடியாது என்றும் இவ்வாறான செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X