Princiya Dixci / 2016 மே 01 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்திருந்த மேதின நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு நகர் வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் மேதினக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கே.யோகவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம் மற்றும் மகளிர் அணித்தலைவர திருமதி. செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .