Princiya Dixci / 2016 மே 02 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தினம், யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது 'ஞாபகங்களின் வலி' கண்காட்சி இடம்பெற்றது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .