2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கல்

Niroshini   / 2016 மே 04 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளாக கோழிக்குஞ்சுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட கால்நடை அபிவிருத்தி சுகாதார நிலையத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றது.

மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியான 49 மில்லியன் ரூபாய் நிதியில் முதற்கட்டமாக இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கௌரி திலகன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, உதவிப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .