2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சக்கர கதிரையில் அவைக்கு வந்த எம்.பி

Menaka Mookandi   / 2016 மே 06 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10.30க்கு கூடியது. அவையில், இரு பக்கங்களும் நிரம்பியிருந்தன.

குறைநிரப்புப் பிரேரணை மீது வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில், குழப்பகரமான நிலைமை ஏற்பட்டிருந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 38 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இரவு 10 மணியளவில், ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக நாட்hளுமன்றச் செயலாளர் காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம், இன்று வெள்ளிக்கிழமை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையிலெயே, அவையின் இரு பக்கங்களும் நிரம்பி வழிந்தன.

இவ்வாறான நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட எம்.பி.யான டளஸ் அலகப்பெரும, சக்கரக் கதிரையில் வந்து, எதிர்க்கட்சி பின்பக்கத்தின் பின்வரிசையில் இருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X