2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரங்களை வெட்டிய மூவருக்கு அபராதம்

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி மற்றும் முழங்காவில் அமைந்துள்ள வனப்பகுதியில்  அனுமதியின்றி பாலை, முதிரை மரங்களை வெட்டிய மூவருக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா  நேற்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பூநகரி வனப்ப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்து  பாலைமரம் வெட்டிய இருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி முழங்காவில் காட்;டுப்பகுதியில் 37,200 ரூபாய் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டியவருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .