Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
George / 2016 ஜூன் 01 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (31) அனுஸ்டிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி, தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன், கடந்த 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .