Shanmugan Murugavel / 2016 ஜூன் 17 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, போட்டியை நடாத்தும் நாடான ஐக்கிய அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.
ஈக்குவடோர் அணியுடனான இன்றைய காலிறுதிப்போட்டியில், சிரேஷ்ட வீரரான கிளைன்ட் டெம்ப்சே, முதலாவது கோலினைப் பெற்றதுடன், இரண்டாவது கோலுக்கு உதவி புரிந்த நிலையில், 2-1 என்ற கோல்கணக்கில் ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆர்ஜென்டீனா, வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை, அரையிறுதிப் போட்டியில், அமெரிக்கா சந்திக்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .