2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 3 முக்கிய புள்ளிகள் சிக்கினர்

George   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளில் இடம்பெறும் பாரியளவிலான போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து எல்.எஸ்.டி போதைபொருள் அடங்கிய 200 முத்திரை மற்றும் 49 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர், பிரபலமான துணி உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .