2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காதலியைக் கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயற்சித்தவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக தனது காதலியைக் கத்தியால் கொலைசெய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நபரை அம்பாறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம்,  அம்பாறை, கொன்டுவட்டுவான பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர், உகன, சேனாகம பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்பின் மத்தியில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .