2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுரங்க அகழ்வு ஊழியர்களின் போராட்டம் நிறைவு

Niroshini   / 2016 ஜூன் 28 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல கோரிக்களை முன்வைத்து கஹாடகஹா சுரங்க அகழ்வு ஊழியர்கள் தொடர்ந்து 6 நாட்களாக முன்னெடுத்து வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, வழமைபோல் இன்று காலை சுரங்க வேலைப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

தமக்கான வேதனக் கொடுப்பனவை அதிகாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கொரிக்கைகளை முன்வைத்து குறித்த சுரங்க ஊழியர்கள் சுமார் 1,800அடி ஆழத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண பிரதி தொழிலாளர் ஆணையாளர் மற்றும் குருநாகல் மாவட்ட தொழிலாளர் ஆணையாளரின் கையொப்பத்துடனான ஆவணமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .