2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

"தனியார் கல்வி நிலையங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன"

Menaka Mookandi   / 2016 ஜூன் 29 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையங்களை, ஓர் ஒழுங்கில் இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், புதன்கிழமை (29) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள், பாடசாலை நேரங்களில் இயங்க முடியாது. தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைத்திருக்கின்றன' என்றார்.  

'இவை தொடர்பாக கல்வி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராய்ந்து, மாவட்டத்தில் இயங்குகின்ற கல்வி நிலையங்களுக்கான ஓர் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தவுள்ளோம். அதற்கான முயற்சிகளை மாவட்டச் செயலகம் மேற்கொண்டுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .