Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 29 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
150ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு, திருகோணமலை-மொறவெவ பொலிஸாரால், மஹதிவுல்வெவ குளத்தின் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இடங்கள், இன்று (29) சிரமதானம் செய்யப்பட்டன.
மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.நிஹால் குலதுங்க தலைமையில் இடம் பெற்ற சிரமதானப் பணியில், 30க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படும் இக்குளத்தில், சாராயப் போத்தல்கள், பொலித்தீன் உறைகள் உட்பட அதிகளவான குப்பைகள்; தீ வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .