2024 மே 14, செவ்வாய்க்கிழமை

நிதி அன்பளிப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 29 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

'ஹியுமன் லின்க்'  விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில் நிதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (28), மருதமுனை ஹியுமன் லின்க் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஹபிழாவின் ஏற்பாட்டில் அரபியன் நலன்புரி சங்கத்தின் தலைவர் நபீல் முபாறக், ஜமால் முஹமட் ஆகியோரின் ஆறாங் கட்ட அன்பளிப்பாக இந்நிதி வழங்கப்பட்டது.

இந்நிதியத்தினால் ஒரு இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிதியினை, மருதமுனையைச் சேர்ந்த, எஸ்.எம்.ஹபிழாவின் சகோதரரான எஸ்.எம்.எம்.அபூபக்கர்  மற்றும் உறவினர்களான எம்.சி.எம்.முஸ்தபா, இப்றாகீம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .