2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆலயம், பள்ளிவாசல் புனரமைப்புக்காக காசேலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள மடுமாதா சிறிய ஆலயத்துக்கான குடிநீர் இணைப்பை வழங்குவதற்கும், மதீனா நகர் பள்ளிவாசலை புனரமைப்பு செய்வதற்குமான காசோலைகளை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது, மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று(30) வழங்கி வைத்தார்.

மன்னார் பேராலய பங்குத்ததந்தையின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள மடு மாதா சிறிய ஆலயத்துக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான காசோலையை, மன்னார் செபஸ்தியார் பேராலய இணைப் பங்குத்தந்தையிடம் அமைச்சர் வழங்கினார்.

மேலும், மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மதீனா நகரில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, மதீனா நகர் பள்ளிவாசலை புனரமைப்பதற்கான  காசோலையை பள்ளிவாசல் நிர்வாகத்திடம்  வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .