2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(30) 5500 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் தங்கம் 45,000 ரூபாயுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று 50,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அக்ஷசய திருதியை தினத்தில் தங்கத்தின் விலையானது 50 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில் இருந்தது. அதன் பின்னர் விலை குறைந்து வழமையான விலையான, 45 ஆயிரம் ரூபாயில் இருந்தது.

இந்நிலையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்து 50,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாமென நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கைச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .