2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'ஆளுமா டோலுமா... அடுத்த பாட்டு ஹிட்டாகனும்' 30 நாட்கள் தூங்காத அனிருத்

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜீத் திரைப்படத்துக்கு வித்தியாசமான பாடல்களை கொடுத்து அவரை அசத்தி விட வேண்டும் என்று கிட்டத்தட்ட 30 நாட்கள் இரவு தூங்காமல் நூற்றுக்கணக்கான டியூன்களை உருவாக்கியுள்ளாராம் அனிருத்.

தான் ரெடி பண்ணிய டியூன்களை இயக்குநர் சிவாவை அழைத்து போட்டுக் காண்பித்து அதில் சிறப்பானதை தெரிவு செய்து, வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள அஜீத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம்.

அனிருத்தின் டியூன்களை கேட்டு ரசித்த அஜீத், அதில் தன்னை மிகவும் கவர்ந்த சில டியூன்களை டிக் செய்து அனுப்பியுள்ளாராம்.

அதில் ஒரு டூயட் மற்றும் ஆரம்ப பாடல் டியூனுக்கான இசைக்கோர்ப்பு பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் அனிருத்.

இந்த பாடல்களில் இதுவரை சினிமாவில் அதிகமாக ஒலிக்காத சில மேல்நாட்டு இசைக்கருவிகளை பயன்படுத்தி தனது இசைக்கு புதிய வடிவம் கொடுக்கப்போகிறாராம் அனிருத்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .