2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பலமான நிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 23 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்டிகுவாவில் ஆரம்பமான, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் பலமான நிலையில் இந்திய அணி காணப்படுகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது முதலாவது இன்னிங்ஸில், எட்டு விக்கெட்டுகளை இழந்து 566 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக, விராத் கோலி 200, இரவிச்சந்திரன் அஷ்வின் 113, ஷீகர் தவான் 84, அமித் மிஷ்ரா 53, ரித்திமான் சகா 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக தேவேந்திர பிஷூ, கிரேய்க் பிராத்வெயிட் ஆகியோர் தலா மூன்றுந விக்கெட்டுகளையும் ஷனோன் கப்ரியல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இன்னிங்ஸில் ஆடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட்டு இழப்புக்கு 31 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் கிரேய்க் பிராத்வெயிட் 11 ஓட்டங்களுடனும் தேவேந்திர பிஷூ ஓட்டமெதையும் பெறாமலும் காணப்படுகின்றனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை மொஹம்மட் ஷமி கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியின் போது விராத் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தனது அதியுயர் ஓட்டமாக, முதலாவது இன்னிங்ஸில் 200 ஓட்டங்கள் மாறியதோடு, வெளிநாட்டு மண்ணில் இந்திய அணித் தலைவர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமாகவும் அமைந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .