2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாலியல் சேட்டை புரிந்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

ஒன்பது வயதுடைய வாய்பேச முடியாத சிறுமியொருவரை பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட 55 வயதுடைய ஒருவரை அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுமியின் வீட்டுக்கு அருகில் தங்கியிருந்துவந்த இச்சந்தேக நபர், குறித்த சிறுமியையும் சிறுமியின் தங்கையையும் அழைத்துவந்து அலைபேசியைக்; காட்டி, அதனை தங்கையிடம் கொடுத்துள்ளார். இதன் பின்னர், குறித்த சிறுமியை அருகிலுள்ள கட்டடமொன்றுக்கு அழைத்துச்சென்று அங்கு சிறுமி மீது பாலியல் சேட்டை செய்துள்ளார்.

இச்சம்பவம் அறிந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .