2026 மார்ச் 12, வியாழக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய்வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .