2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதிலட்சுமி ஆகிய திரையுலக பிரமுகர்கள் மறைவு அடுத்தடுத்து நடந்ததால் அந்த அதிர்ச்சியில் இன்னும் மீளாத கோலிவூட் திரையுலகினர்களுக்கு இன்று காலை மேலும் ஒரு அதிர்ச்சியாக இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கும், 'சைவம்' திரைப்படத்துக்காக எழுதிய 'அழகே அழகே எதுவும் அழகே' என்ற பாடலுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .