Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் வைத்து 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில்4 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர்.
மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும் - ஆயுததாரிகளுக்கும் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர்.
லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .