2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில், 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(28) இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் பொற்றோர்களினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு   முறைப்பாட்டையடுத்தே, குறித்த சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்து, கமராவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .