2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கான சகல வசதிகளையும் கொண்டதாக புதிய கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை அதன் அலுவலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

தற்போதுள்ள சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு அருகிலுள்ள காணியில் இப்புதிய கட்டடத்தொகுதி நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்துக்கான பௌதீகவளத் தேவையை பூர்த்திசெய்வதுடன், இவ்வலுவலகத்துக்கு வாகனம் மற்றும் ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசாங்கத்தால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களில் நீண்டகாலமாக வெற்றிடமாகக் காணப்படும்  மருத்துவத்தாதிகளை ஒருவார காலத்துக்குள் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .