Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
இலங்கை இராணுவத்தினரால் 7ஆவது தடவையாக நடத்தப்பட்டு வருகின்ற 'நீர்க்காகம்' என்ற விசேட தாக்குதல் பயிற்சி நேற்றுச் செவ்வாய்க்கிழமை புல்மோட்டை, அரிசி மலைப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுடன் நிறைவடைந்தது.
கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய இப்பயிற்சி கொக்கிளாய் பிரதேசத்தில் ஆரம்பமாகியிருந்தது.
இதில் 2,500 காலாட் படையினரும் 638 கடற்படையினரும் 506 விமானப் படையினரும் கலந்துகொண்டனர். அத்துடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களும் கலந்துகொண்டனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .