2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 22

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1499: சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று, தனி நாடாகியது.

1692: ஐக்கிய அமெரிக்காவில், சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.

1711: டஸ்கரோரா பழங்குடிகள், வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130பேரைக் கொன்றனர்.

1784: அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில், ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.

1877: யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் பத்திரிகையின் ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப முதலியார் நியமிக்கப்பட்டார்.

1888: நெஷனல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.

1893: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து, முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

1896: பிரித்தானியாவின் அரச வம்சத்தில். அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார்.

1908: பல்கேரியா, விடுதலையை அறிவித்தது.

1914: ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல், இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.

1934: வேல்சில், சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.

1941: யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.

1944: இரண்டாம் உலகப் போர் - ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.

1955: ஐக்கிய இராச்சியத்தில் ஐ.டிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1960: மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1965: இந்திய - பாகிஸ்தான் போர் - 1965 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர், ஐ.நா.வின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.

1970: மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், தனது பதவியை விட்டு விலகினார்.

1975: ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1980: ஈரான் - ஈராக் போர் - ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.

1993: ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று, சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108பேர் கொல்லப்பட்டனர்.

1995: நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை - யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1997: அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2006: MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .