2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

77 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணைப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து  77.450 கிலோகிராம் கேரளா கஞ்சா, வெள்ளிக்கிழமை (23) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு  கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் முச்சக்கரவண்டியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 77.450கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. மேலதிக விசாரைணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .